;
Athirady Tamil News

குடும்ப தகராறில் மோதல் பெண் வி.ஏ.ஓ. மீது தாக்குதல்..!!

0

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவரும் தாரமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த வேலு கலையரசி (29) ஆகியோரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர் .இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர் .கலையரசி வெளி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் கலையரசி குரூப்-1 தேர்வு எழுத பயிற்சி பெற்றுவந்தார். அதைத்தொடர்ந்து நேற்று தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நாகராஜ் வீட்டிற்கு சென்று தான் படித்து வந்த புத்தகத்தை எடுத்து செல்ல நாகராஜின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த நாகராஜ் அவரது அண்ணன், அம்மா ஆகியோர் தகராறு செய்து கலையரசியை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இந்த தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த நாகராஜ், பூபதி, அழகம்மாள், கலையரசி, தேவி, தனலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.