;
Athirady Tamil News

விநாயகர் சிலையை கரைக்கச் சென்றவாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி..!!

0

திருச்செங்கோடு ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகன் முத்துவேல் (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் தங்களது பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்த பகுதி மக்களுடன் காவிரி ஆற்றுக்கு சென்றார். போலீசார் ஒதுக்கி இருந்த இடத்திற்கு செல்லாமல் காட்டு வேலம்பாளையம் பகுதி அருகில் உள்ள முத்துலட்சுமி செங்கல் சூளைக்கு பின்புறம் உள்ள பகுதியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக்க ஆற்றில் மூழ்கினார்.சிலையை கரைத்தவர்கள் முத்து வேலை காணாமல் தேடிய போது தான் அவர் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. நீண்ட நேரமாக உடலை தேடியும் உடல் கிடைக்காத நிலையில் மீனவர்கள், தீயணைப்பு துறையினர் தேடிய போது ஆற்றில் சற்று தொலைவில் முத்துவேல் உடல் கிடந்தது. பின்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து மொளசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.