;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா நிலவரம்- மேலும் 5,379 பேருக்கு தொற்று..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 4,417 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,379 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 69 ஆயிரத்து 661 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 590 பேர் குணமாகி உள்ளனர். இதில் நேற்று 7,094 பேர் அடங்குவர். தற்போது 50,594 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மேலும் 27 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,057 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.