;
Athirady Tamil News

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து மேல்முறையீடு..!!

0

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.