;
Athirady Tamil News

ராகுல் காந்தியின் நடைபயணத்தால் பாஜக அச்சம் அடைந்துள்ளது: காங்கிரஸ்..!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணத்தை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறியதாவது; மத்திய அரசுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைப்பதையே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரை பிரதிபலிக்கிறது. இந்த நடைப்பயணத்தை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.