;
Athirady Tamil News

காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு!! (PHOTOS)

0

அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத்தை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது.

இந்த நினைவு சின்னத்தை இன்று பொறுப்பதிகாரியிடம் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் ஏ.எம். நஸீர் ஹாஜியார் பொதுச் செயலாளர் மீரா முஹைதீன் பைசல் நிர்வாக குழு தலைவர் அஹ்மட் புர்க்கான் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களான காரியப்பர் முஹம்மது றூமி இளைய தம்பி முஹம்மது சமீர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதன் போது காரைதீவு பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் இணைந்து இருந்ததுடன் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிபொருள் நெருக்கடி மற்றும் அனர்த்த காலகட்டத்தில் பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் பராட்டை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.