;
Athirady Tamil News

அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்று வரி ஏய்ப்பு- வருமான வரி சோதனையில் அம்பலம்..!!

0

தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதிலும் அங்கீகரிக்கப்படாமல் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் நன்கொடை குறித்த விவரங்களை சமர்ப்பித்தல் முகவரி, நிர்வாகிகள் குறித்த விவரங்களை புதுப்பிக்க தவறியது உள்ளிட்ட விதிகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது.

இதில் சில கட்சிகள் தீவிர நிதி மோசடியிலும் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நேற்று அதிரடி சோதனை நடத்தியது. குஜராத், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மும்பையில் நடந்த சோதனையில் அங்குள்ள அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்தது. சயான் கோலிவாடா குடிசை பகுதியில் உள்ள கட்சியும், போரிவிலியில் உள்ள கட்சி ஒன்றும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.150 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

ஹவாலா மூலம் இந்த பண பரிமாற்றம் நடைபெற்றதும், இதனால் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது. அபனா தேஷ் கட்சி 2017-18 மற்றும் 2019-20ல் மொத்தம் ரூ.232 கோடி நன்கொடை பெற்றது. அந்த கட்சியின் முகவரி உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்சி தலைவரின் முகவரி குஜராத் மாநிலத்தில் பதிவு ஆகி இருந்தது. இப்படி பல கட்சிகள் நன்கொடை விவரம், முகவரியில் குழப்பம் இருப்பது இந்த சோதனையின் போது தெரியவந்தது. தேர்தல் கமிஷனில் அளித்த முகவரியில் செயல்படாத 87 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்து இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.