;
Athirady Tamil News

ஷோரூம் குடோனில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பு வாகனங்கள் எரிந்து நாசம்..!!

0

ஜார்காண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் மதினி நகர் பகுதியில் உள்ள ஷோரூம் குடோன் ஒன்றில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். மேலும், பல கோடி மதிப்பிலான 300 இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களுடன் விரைந்தனர்.

பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி, ஷோரூம் உரிமையாளரின் தாய் என்றும் அவர் தீ விபத்தில் மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் இருப்பினும் தீ விபத்திற்கான சரியான காரணத்தை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.