;
Athirady Tamil News

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

0

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையில் நினைவேந்தல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை, ஓய்வுபெற்ற வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம், யாழிற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் மகேஸ்வரன் யாழ்ப்பாண பிராந்திய தொல்லியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பந்துஜீவ ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அனுர மனதுங்க உட்பட அதிகாரிகள் இணையவழியில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், இந்துகற்கைகள் பீட பீடாதிபதி சுகந்தி,உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கஜவிந்தன், தொல்லியல் திணைக்கள ஆய்வு அதிகாரி கைலைவாசன் உள்ளிட்டோர் ஞாபகார்த்த உரைகளை ஆற்றினர்.

இதன் போது நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.