;
Athirady Tamil News

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான ஊவா பல்கலை மாணவனை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிமன்று உத்தரவு!!

0

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனை, அதே பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் கொக்குவில் பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உள்ளாக்கி, தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,இரண்டாம் வருட மாணவனை பொலிஸார் கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை மாணவனை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.