;
Athirady Tamil News

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்படும் 8 சிறுத்தைகள் – மத்தியபிரதேச உயிரியல் பூங்காவுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி..!!

0

இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து வருகிற 17-ந்தேதி காலையில் டெல்லி கொண்டு வரப்படுகின்றன. பின்னர் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி அன்று பூங்காவில் விடுகிறார். அன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.