;
Athirady Tamil News

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று தொடக்கம்..!!

0

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி நேற்றைய தினம் கோவில் நடையை திறந்து மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபாராதணை காட்டினார். தொடர்ந்து இன்று முதல் வரும் 21-ந்தேதி வரை சபரிமலையில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து வரும் 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.