;
Athirady Tamil News

முறைகேடு வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் நெருங்கிய நண்பர் கைது..!!

0

டெல்லி வக்புவாரிய தலைவராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ அமானதுல்லா கான் இருந்து வருகிறார். இவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு வக்பு வாரியத்தில் பணி நியமனம் தொடர்பாக முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக ஆஜராகும்படி அமானதுல்லா கானுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அதே சமயம் லஞ்சஒழிப்பு போலீசார் எம்.எல்.ஏ வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது அமானதுல்லா கான் வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் உரிமம் பெறாத 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அமானதுல்லா கானை கைது செய்தனர். இந்த நிலையில் அவரது நண்பர் ஹமித் அலியை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.