;
Athirady Tamil News

இழப்பீடு தொடர்பில் பரிசீலிக்குமாறு ஆலோசனை !!

0

இலங்கை கடல் எல்லையில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

X-Press Pearl கப்பலின் சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இதனை தெரிவிப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன தெரிவித்தார்.

இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை குறித்து முழுமையான விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.