;
Athirady Tamil News

சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

0

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடியில் திரைமறைவில் இருந்து செயல்பட்டதாக கூறியது. மேலும் பத்ராசால் மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டு கூடுதல் குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரது நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கிடையே சஞ்சய் ராவத் தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.