;
Athirady Tamil News

துறைமுக அமைச்சு மீண்டும் ரோஹிதவுக்கு?

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின்னர், முழு அமைச்சரவையும் நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், முக்கிய அமைச்சர்கள் முன்னர் வகித்த அமைச்சுப் பதவிகளையே மீண்டும் பெற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவித்த அவர், துறைமுகங்கள் மற்றும் கப்பல் தறை அமைச்சுப் பதவியை தான் வெற்றிகரமாக முன்னெடுத்ததால், தனக்கும் அதே அமைச்சுப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.