;
Athirady Tamil News

யாழ்.பல்கலை முகாமைத்துவ பீட மாணவர்கள் இரத்த தானம்!!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 23ஆவது அணியினரால், இரத்ததான முகாம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பா.நிமலதாசனின் வழிகாட்டலில், முகாமைத்துவ பீடத்தின் 23வது அணியினரால் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானத்தில் ஈடுபட்டனர்.

இரத்ததான முகாமில் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி பா.நிமலதாசன் யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய செயலாளர் சி.றாகவன் உட்பட யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.