;
Athirady Tamil News

கொடிகாமத்தில் ரயில் விபத்தில் சிக்கிய இளைஞனுக்கு உதவிக்கரம்!!

0

சில மாதங்களுக்கு முன்னர் தந்தையும், இரண்டு பிள்ளைகளும் யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி ஒரு பிள்ளை உயிரிழந்த நிலையில் மற்றொரு பிள்ளையான இளைஞன் தற்போது வரை கோமா நிலையில் காணப்படுவதால் அவருக்குத் தேவையான விசேட மருத்துவக் கட்டிலை வாங்கித் தருமாறு யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அமையக் காலமான அபிராமி முருகானந்தம் நினைவாகப் பிரான்சில் வசிக்கும் அவருடைய தாயாரினால் வழங்கப்பட்ட நிதி உதவியில் குறித்த கட்டில் கொள்வனவு செய்யப்பட்டுக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.