;
Athirady Tamil News

மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளன- ராகுல்காந்தி..!!

0

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி சாடி உள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல, ஐந்து முதல் ஆறு பணக்கார இந்தியர்களுக்கானது. அவர்கள் விரும்பும் எந்த வியாபாரத்தையும் ஏகபோகமாக நடத்துகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை இந்தியாவுக்கு நாங்கள் ( காங்கிரஸ்) ஒருபோதும் வழங்கவில்லை. இன்று எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வை நாங்கள் இந்தியாவிற்கு வழங்கவில்லை. அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.