;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது: இந்தியாவில் புதிதாக 4,777 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் புதிதாக 4,777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 22-ந் தேதி பாதிப்பு 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383 ஆகவும், நேற்று 4,912 ஆகவும் குறைந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 65 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,196 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 43,994 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 442 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 11 மரணங்கள் உள்பட மேலும் 23 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,510 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.