;
Athirady Tamil News

சிறுமி பாலியல் பலாத்காரம்- 4 வட மாநில வாலிபர்கள் கேரளாவில் கைது..!!

0

கேரள மாநிலம் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தபோது, 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர், 4 வட மாநில வாலிபர்களுடன் வாக்குவாதம் செய்வதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார், சிறுமியை விசாரித்தபோது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு புகாரை கூறினார். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி கூறினார். இந்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அதில் கிடைத்த தகவல் வருமாறு:-

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு உள்ளார். அந்த ரெயிலில் வட மாநில இளைஞர்கள் 4 பேர் வந்து உள்ளனர். அவர்களில் ஒருவன், சிறுமியுடன் பழகி காதலிப்பதாக கூறி உள்ளான்.

இதனை நம்பிய சிறுமி, 4 வாலிபர்களுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்துள்ளார். அப்போது அவருக்கு திருமண ஆசை காட்டி காதலிப்பதாக கூறிய வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மேலும் அவரது நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இது தொடர்பாகத் தான் அவர்களுக்குள் ரெயில் நிலையத்தில் வாக்குவாதம் நடந்துள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார், 4 வாலிபர்களையும் கைது செய்தனர்.

அவர்களது பெயர் இக்காரர் ஆலம் (வயது 18), அஜாஜ் (25), ஷகீல் ஷா (42), இர்ஷாத் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.