;
Athirady Tamil News

வகுப்பறையில் மாணவியின் சீருடையை கழற்ற வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

0

மத்திய பிரதேச மாநிலம் ஷாதால் மாவட்டத்தில் பழங்குடியினர் விவகாரத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு துவக்கப் பள்ளியில், 5ஆம் வகுப்பு மாணவியின் சட்டையை ஆசிரியர் கழற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அழுக்கு படிந்த சீருடை அணிந்து வந்த அந்த மாணவியின் ஆடைகளை, சக மாணவிகள் முன்னிலையில் கழற்ற வைத்ததுடன், அதை துவைக்கவும் வைத்துள்ளார் ஆசிரியர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவி ஆடையை கழற்றி துவக்கும்போது எடுத்த புகைப்படங்களை, பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் வாட்ஸ்அப் குரூப்பில் அந்த ஆசிரியரே பகிர்ந்துள்ளார். அதில் தன்னை தூய்மை தன்னார்வலர் என்று குறிப்பிட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.