;
Athirady Tamil News

ராகமவில் கைக்குண்டு மீட்பு !!

0

பல்​வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ராகம – வல்பொல பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்று கூரிய வாள், கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய, ராகமவில் கைக்குண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது வெலிசர, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.