;
Athirady Tamil News

இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- குடியரசுத் தலைவர்..!!

0

கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். தெய்வீக திருவிழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது என்று அவர் கூறினார்.

மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழா என்றும் அவர் குறிப்பிட்டார். பின்னர், ஹூப்ளியில் நடைபெற்ற பூர சன்மனா பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவருக்கு 900 கிராம் எடை கொண்ட ஸ்ரீசித்தரோட சாமி சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பரிசளித்தார்.

விழாவில் பேசிய திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:- நீங்கள் பாராட்டியது இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியுள்ளீர்கள். இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடையக்கூடிய நேரம் இது. அனைவரும் இதற்கு இணைந்து செயல்படவேண்டும். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

கணினி ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்ததுள்ளது. இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.