;
Athirady Tamil News

பிரதமர் மோடி ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது- அமித்ஷா..!!

0

குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்ற திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். பிரமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், 60 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ. 64,000 கோடி முதலீட்டில் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 35,000 புதிய அவசர கால சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2013- 14ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2021 -22ம் ஆண்டில் அதன் எண்ணிக்கையை 596 -ஆக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 51,000-ல் இருந்து 89,000-மாகவும், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 31,000-ல் இருந்து 60,000-ம் ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.