;
Athirady Tamil News

கிராமத்திற்கு தகவல் சட்டம் என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!! (படங்கள்)

0

“கிராமத்திற்கு தகவல் சட்டம் ” என்னும் தொனிப்பொருளில் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் தகவல் அறியும் ஆணைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது.

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.ரி உபாலி அபேரத்தன , தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர்ளான கிசாலி பின்ரோ ஜெயவர்தன,ஜெகத் லியோன் ஆராய்ச்சி, யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைத்துறை பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் தகவல் அறியும் சட்டம் தொடர்பாக கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.