;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 3,615 பேருக்கு கொரோனா..!!

0

கொரோனா பாதிப்பு நேற்று 3,230 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,615 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 4,972 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 40,979 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றைவிட 1,379 குறைவாகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் 8 பேர் உள்பட மேலும் 22 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,584 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.