;
Athirady Tamil News

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணமானார்!!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸ் பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 55 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டார்.

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் திறைசேரி செயலாளரும் இணைந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ள்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.