;
Athirady Tamil News

எரிபொருள் விநியோக இயந்திரங்களில் அரச முத்திரை!!

0

பெற்றோல் விநியோகத்தில் மோசடியில் ஈடுபட்ட கொழும்பு -7 இல் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தின், மூன்று எரிபொருள் விநியோக இயந்திரங்களில் இரண்டு அரச முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளன.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அளவை மற்றும் நிறுவைகள் திணைக்களம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள ஒக்டேன் 92 ரக பெற்றோலை விநியோகிக்கும் மூன்றில், இரண்டு இயந்திரங்கள் ஊடாக உரிய கட்டணத்துக்கான அளவை விட குறைவாக பெற்றோல் விநியோகித்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இரு எரிபொருள் விநியோக இயந்திரங்கள் ஊடாக ஒரு லீற்றருக்கு 1.2 சதவீதம் குறைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றருக்கு 5 ரூபா 40 சதம் என்ற அடிப்படையில் குறைந்த அளவில் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த எரிபொருள் விநியோக இயந்திரங்களும் அரச முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.