;
Athirady Tamil News

ஜப்பான் தனது பணியை சரியாக செய்யும்!!

0

மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பங்குபற்ற பிலிப்பைன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மணிலாவில் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகியை (Shunichi Suzuki) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது , இலங்கையின் கடன் நெருக்கடி நிலைமைகளில் பிரச்சினைகளை தீர்க்க ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக இருப்பதாகவும், எனினும் சீனா மற்றும் இந்தியா போன்ற இருதரப்பு கடன் வழங்குநர்களும் இலங்கையின் நெருக்கடியை தீர்க்க உண்மையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.