;
Athirady Tamil News

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை மேலும் நீட்டிப்பு- மத்திய அரசு தகவல்..!!

0

மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். உலகளாவிய விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது.

உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும். சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31 வரை எந்த மாற்றமில்லாமல் நீடிக்கும்.

சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் சோயா பீன் எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது பூஜ்யமாக உள்ளது. இருப்பினும் இந்த மூன்று வகையான சமையல் எண்ணெய்களுக்கு சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதுமுன்னதாக மத்திய நுகா்வோா் விவகாரத்துத்றை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, கடந்த செப்டம்பா் 1- ந்தேதி .

நிலவரப்படி உள்ளூர் சந்தையில் கடலை எண்ணெயின் சராசரி சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.188.04 என்ற விலையிலும், நல்லெண்ணெய் கிலோ ரூ.172.66, வனஸ்பதி கிலோ ரூ.152.52, சோயாபீன் எண்ணெய் கிலோ ரூ.156, சூரியகாந்தி எண்ணெய் ரூ.176.45, பாமாயில் கிலோ ரூ.132.94 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.