;
Athirady Tamil News

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் மதுரையில் சிக்கியது!!

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த ஒன்றரை தொன் மஞ்சள் தொகை தமிழ்நாடு – மதுரை பகுதியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது, ​​இந்த மஞ்சள் கையிருப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயார் செய்திருந்தமை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.