;
Athirady Tamil News

மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு மட்டுமே 9-ந்தேதி வரை காலாண்டு விடுமுறை – மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் விளக்கம்..!!

0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிறைவடைந்த நிலையில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே சமயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10-ந்தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி அளித்துள்ள விளக்கத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள 9-ம் தேதி வரை விடுமுறை என்ற அறிவிப்பு, மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இன்று முதல் மீண்டும் இயங்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.