;
Athirady Tamil News

31 வருடங்களின் பின்னர் சிக்கிய பெண்!!

0

தந்தை மற்றும் மகனை 31 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1991 ஆம் ஆண்டு நாவின்ன மற்றும் பாணந்துறையில் வசித்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

உயிரிழந்த தந்தையின் இரண்டாவது மகனின் மனைவி, பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வாதுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மற்றொரு சந்தேக நபரை கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அடுத்து, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் அவர் செப்டம்பர் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரின் மனைவி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை மெண்டிஸ் மாவத்தையில் உள்ள வீடொன்றில் தந்தையும் (47) மற்றும் பிலியந்தலை பொல்கொட ஆற்றுக்கு அருகில் மகனும் (21) படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இறந்தவருக்குச் சொந்தமான மொரட்டுவை மெண்டிஸ் மாவத்தையில் உள்ள 12 பேர்ச்சஸ் காணியை சுவீகரிப்பதற்காகவே இரட்டைக்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.