;
Athirady Tamil News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்!!

0

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையினை 4,000ஆக குறைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சபை திட்டத்தை அமுலாக்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக அமுல்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.