;
Athirady Tamil News

தரகுப்பணத்தை 20 சதவீதமாக அதிகரிக்கவும் !!

0

தற்போது லொத்தர் டிக்கட்டுக்களுக்காக வழங்கப்படும் 17.05 சதவீத தரகுப் பணத்தை உடனடியாக 20 சதவீதமாக அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரகுப் பணத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்குமாறு, 10 வருடங்களாக தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தாலும் அதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என, அச்சங்கத்தின் கிருஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.

திறைசேரியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த விற்பனை முகவர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமை வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் சுமார் 4800 விற்பனை பிரதிநிதிகளும் 38,000 விற்பனை உதவியாளர்களும் லொத்தர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை நம்பி வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் இரு இலட்சம் எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.