;
Athirady Tamil News

யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு!! (PHOTOS)

0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்றையதினம் (10.10.2022) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்றையதினம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா அவர்கள் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவினை மேற்கொண்டார். இவ் விஷேட நிகழ்வில் 25 பேரிற்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மேலதிக மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், Oferr ceylon நிறுவன பிரதிநிதிகள், பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.