;
Athirady Tamil News

யாழில் போதைப்பொருள் மற்றும் போதை ஏற்றுவதற்குறிய பொருட்களுடன் இருவர் கைது! (படங்கள்)

0

ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில் வைத்து இருவரும் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் , ஒன்றரை கிராம் ஹெரோயின் , 10 ஊசி சிரிஞ் , தேசிக்காய் , லைட்டர் , தீப்பெட்டி உள்ளிட்ட போதை ஏற்ற பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.