;
Athirady Tamil News

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உலருணவு பொருட்கள் வழங்கல் ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்தவரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருபவருமான சமூக ஆர்வலர் திரு. சின்னையா மோகன் அவர்களின் இரட்டைப் புதல்வர்களான நிரோஷன், நிவாஸ் ஆகியோரின் இருபதாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் ( 10 – 10 – 2022 ) அக்குடும்பத்தினரின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேசத்தில் வாழ்ந்துவருகின்ற ஐம்பது குடும்பங்களுக்கு ரூபாய் 250000 பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் பீரிஸ் ராஜூ ஆகியோரும் கலந்துகொண்டு உலருணவு பொருட்களை வழங்கிவைத்தனர் .

கடந்த பல வருடங்களாக சின்னையா மோகன் குடும்பத்தினரால் புங்குடுதீவில் தொடர்ச்சியாக பலதரப்பட்ட பொதுநலன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.