;
Athirady Tamil News

கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 7-ந்தேதி பாதிப்பு 1,997 ஆக இருந்தது.

மறுநாள் 2,797, 9-ந்தேதி 2,756, நேற்று 2,424 ஆக குறைந்திருந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 394 ஆக உயர்ந்தது. கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 2,654 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 27,374 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றைவிட 705 குறைவாகும். தொற்று பாதிப்பால் குஜராத், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என நேற்று 5 பேர் இறந்துள்ளனர். இதுதவிர கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,822 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.