;
Athirady Tamil News

காதலன் திருமணத்துக்கு மறுப்பு: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை..!!

0

காதல் ஜோடி
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நங்கலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எச்.குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலப்பா. இவரது மகள் வெண்ணிலா (வயது 22). இவரும், எச்.ஜங்கலஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஆஞ்சப்பா என்பவரின் மகன் சந்திரசேகரும் காதலித்து வந்தனர். இவர்கள் அந்தப்பகுதியில் ஜோடியாக வலம் வந்தனர். இவா்களின் காதல் விவகாரம் 2 கிராமங்களை சேர்ந்த அனைவருக்கும் தெரியும். இதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிைலயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் தேடி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

தற்கொலை
அப்போது, சந்திரசேகர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக வெண்ணிலாவின் பெற்றோர் நங்கலி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இருவீட்டாரையும் சமாதானம் செய்து நங்கலி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், வெண்ணிலா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சந்திரசேகரிடம் வலியுறுத்தி உள்ளார். அப்போது, என் மீது உனது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர் என கூறி அவரை திருமணம் செய்ய சந்திரசேகர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த வெண்ணிலா, வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நங்கலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் திருமணத்துக்கு மறுத்ததால், மனமுடைந்து வெண்ணிலா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக நங்கலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.