;
Athirady Tamil News

அசாமில் படகு கவிழ்ந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம்..!!

0

அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.

இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேமாஜி மாவட்டத்தின் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தை காணாமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.