;
Athirady Tamil News

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

0

டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அதில், வேறு எந்த மாநிலத்திலும் தடை விதிக்காதபோது டெல்லியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ள அவர், பட்டாசு தடையால் சிவகாசியை சுற்றி உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.