;
Athirady Tamil News

சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானம் திடீர் ரத்து- கொந்தளித்த பயணிகள்..!!

0

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் பயணிக்க ஆயத்தமாகினர். விமானம் 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், முன்பதிவு செய்த பயணிகளை இன்று மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இன்றே மாற்று விமானம் மூலம் தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.