;
Athirady Tamil News

கொட்டி தீர்க்கும் கனமழை: கர்நாடகாவில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

0

கர்நாடக மாநிலத்தில் தற்போது வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகர்நாடக பகுதிகளில் குறிப்பாக இரட்டை மாநகரான உப்பள்ளி-தார்வார், யாதகிரி, விஜயாப்புரா, ஹாவேரி, கதக் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தாவணகெரேயில் பெய்து வரும் கனமழையால் ஜகலூர் தாலுகா மிடிசோடி என்ற கிராமத்தில் ஜனதா காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாகனூர் உள்ள கிராமத்தில் ஒரு விவசாயி வீட்டின் அருகே உள்ள கொட்டகை இடிந்து விழுந்ததில் 4 மாடுகள் பரிதாபமாக இறந்தன. விஜயாப்புரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தோனி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் திகோட்டா, தாலிகோட், பசவனபாகேவாடி, பபலேஸ்வரா ஆகிய தாலுக்காக்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளம், மக்காசோளம் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.