;
Athirady Tamil News

பெங்களூருவில் 3 குழந்தைகளை கடத்தி சென்ற சிறுமி..!!

0

பெங்களூரு கலாசிபாளையா ஆர்.வி.சாலையில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகளையும் 15 வயது சிறுமி கடத்தி சென்றுவிட்டாள். இதுகுறித்து கலாசிபாளையா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து இருந்தனர். இதை தொடர்ந்து குழந்தைகளை கடத்தி சென்ற சிறுமியை ஒசக்கோட்டையில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஒசக்கோட்டையில் 2 குழந்தையும், மாலூாில் ஒரு குழந்தையும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட 3 குழந்தைகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகளை சிறுமி கடத்தி சென்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.