;
Athirady Tamil News

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!!

0

கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தையும் விட 10 நிமிடங்களுக்கு முன்னர் பயணிக்கவுள்ளன.

கரையோர ரயில் பாதையின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

கோட்டை – பாணந்துரை ரயில் பாதை சீர்குலைந்திருப்பதால் புதிய ரயில் கட்டைகள் பொருத்தப்படும் வரை இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.