;
Athirady Tamil News

திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூதாட்டி கைது!!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டி மற்றும் வல்வெட்டி ஆகிய பகுதிகளில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டிலையே வடமராட்சி ஊரிக்காடு பகுதியை சேர்ந்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலையே குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தாலி, ஒரு கிராம் 630 மஞ்சாடி நிறையுடைய தோடு, 625 மில்லி கிராம் நிறையுடைய பஞ்சாயுத பென்டன், என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், வங்கிகளில் அடகு வைத்த பற்றுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.