;
Athirady Tamil News

கோழிக்கோட்டில் ரெயில் மீது கல்வீச்சு- 2 பயணிகள் காயம்..!!

0

கேரள மாநிலம் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.55 மணியளவில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இலத்தூரை நோக்கி சென்ற இந்த ரெயில் மேற்கு மலை என்ற பகுதியை தாண்டிச் சென்ற போது யாரோ மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேத மடைந்தன. மேலும் கண்ணாடி உடைந்ததில் 2 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் கண்ணூர் ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கல்வீசியது யார்? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக கோழிக்கோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெஸ்ட் ஹில் மற்றும் இலத்தூர் பகுதிகளில் அவர்கள் குற்றவாளிகளை தேடினர். ஆனாலும் இதுவரை யாரும் சிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.