;
Athirady Tamil News

தீபாவளிக்காக வீட்டின் சுவரில் வர்ணம் பூசும் பணியின்போது விபரீதம்- 3 வாலிபர்கள் பலி..!!

0

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தங்கள் குடிசைகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணியின்போது நிலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். ராஞ்சியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதாப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பர்வா கோச்வா கிராமத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி சிறுமி உள்பட 4 பேர் மண்ணில் புதைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து, பிரதாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினோத் குமார் கிராம மக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டார். இதில், நான்கு பேரும் மண்ணில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு பிரதாப்பூர் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் முனக் குமாரி (18), ஆர்த்தி குமார் (15), பிங்கி குமார் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்காவது நபர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.